இந்தியா

பிரதமர் மோடியை சந்தித்த பிரக்ஞானந்தா... பிரதமர் சொன்ன அந்த ஒரு வார்த்தை

தந்தி டிவி

உலகக் கோப்பை செஸ் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, கடந்த வாரம் தனது பெற்றோருடன் டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு சென்றுள்ள பிரக்ஞானந்தா செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பிரதமர் தன்னுடைய பயிற்சிகள் குறித்து கேட்டு அறிந்ததாகவும், அவரை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதோடு, அவருடன் கலந்து உரையாடியதை ரசித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடி தனக்கு சில பரிந்துரைகளை வழங்கியதாக தெரிவித்த பிரக்யானந்தா, அவருடைய வாழ்த்துக்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார். அத்துடன், இந்தியாவில் வலிமையான வீரர்கள் இருப்பதாகவும் கடினமாக பணியாற்றி போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதே நமது முதன்மை இலக்கு எனவும் அவர் தெரிவித்தார்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்