இந்தியா

பிப்ரவரி இறுதிக்குள் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிட்டும் பின்பற்றாதது ஏன் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தந்தி டிவி

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் 100 க்கு மேல் உள்ள மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து விசாரிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் சில மாதங்களுக்கு முன உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு பின்பற்றப்படாத நிலையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தங்களது உத்தரவை ஏன் பின்பற்றாமல் இருக்கிறீர்கள்? என மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து இருக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், 300 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள மாவட்டங்களில் இரண்டு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் எனவும் தற்போது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"