இந்தியா

புதுச்சேரியில் பொங்கல் பரிசு அறிவிப்பு..!

புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 200 ரூபாய் வழங்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

தந்தி டிவி

புதுச்சேரியில் 3 மாத இலவச அரிசிக்கு பதிலாக

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 1.75 லட்சம் சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரத்து 900 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதேபோல் ஒன்றரை லட்சம் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்த , 54 கோடி ரூபாய் ஒதுக்கி துணை நிலை ஆளுனர் கிரண்பேடி அனுமதி அளித்தார்.

இதற்கிடையே, பொங்கல் பண்டிகையையொட்டி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 1.75 லட்சம் சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக தலா 200 ரூபாயை வங்கி கணக்கில் வழங்கவும், இதற்காக , 3.49 கோடி ரூபாயை ஒதுக்கவும் ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை