இந்தியா

புதுச்சேரியில் பொங்கல் பரிசு அறிவிப்பு..!

புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 200 ரூபாய் வழங்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

தந்தி டிவி

புதுச்சேரியில் 3 மாத இலவச அரிசிக்கு பதிலாக

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 1.75 லட்சம் சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரத்து 900 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதேபோல் ஒன்றரை லட்சம் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்த , 54 கோடி ரூபாய் ஒதுக்கி துணை நிலை ஆளுனர் கிரண்பேடி அனுமதி அளித்தார்.

இதற்கிடையே, பொங்கல் பண்டிகையையொட்டி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 1.75 லட்சம் சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக தலா 200 ரூபாயை வங்கி கணக்கில் வழங்கவும், இதற்காக , 3.49 கோடி ரூபாயை ஒதுக்கவும் ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை