பிரதமர் பதவிக்கு அரசியல் மற்றும் அனுபவ முதிர்ச்சி பெற்ற தலைவர் தான் தற்போது தேவை என்றும், ஆளும் பா.ஜ.க. வின் எதிரணியில், அத்தகைய தகுதி உள்ளவர்கள் அதிகம் பேர் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.