இந்தியா

ஒன்றுமறியா குழந்தை... சிறுவனை ஏவி... இரு பெண் பேய்கள் நிகழ்த்திய கொடூரம் ... ஈரக்குலையை அறுத்த பயங்கரம்

தந்தி டிவி

கடனை திருப்பி கேட்டு வற்புறுத்தியதால், கடன் கொடுத்தவரின் 6 வயது மகளை கடத்தி இரு பெண்கள் கொன்ற சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திராவின் சித்தூரை சேர்ந்தவர் அசன்துல்லா. இவரின் ஆறு வயது மகளான அஸ்வீயா திடீரென மாயமானது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புகாரின் அடிப்படையில் 12 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், அதே பகுதியில் உள்ள ஏரிக்கால்வாயில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ரேஷ்மா என்பவருக்கு அசன்துல்லா கடனாக பணம் கொடுத்திருந்ததும், நீண்ட நாள்களானதால் பணத்தை திருப்பி கேட்டு வற்புறுத்தியதும் தெரியவந்தது. இதனால், ஆத்திரத்தில் இருந்த ரேஷ்மா, சிறுவன் ஒருவன் மூலம் அசன்துல்லாவின் மகளை தன் வீட்டிற்கு நாசுக்காக வரவழைத்து, தன் தாயாருடன் சேர்ந்து சாப்பாடு போட்டு பின் மூச்சு திறணடித்து கொலை செய்தது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், ரேஷ்மா, அவரின் தாய் ஹசீனா மற்றும் சிறுவன் ஒருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி