இந்தியா

முன்னாள் மனைவியை கொலை செய்ய வந்தவர் கைது, சுற்றிவளைத்து கத்தியை பறிமுதல் செய்த போலீசார்

ஆந்திராவில், முன்னாள் மனைவியை கொலை செய்ய வந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தந்தி டிவி

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகேயுள்ள பன்லகுடாவை சேர்ந்த சுவர்ணா அதே பகுதியை சேர்ந்த சாய்கிரணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணமான பிறகு தொடர்ந்து சண்டை இருந்து வந்த நிலையில், விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில், சுவர்ணாவையும், அவரது தாயாரையும் தாக்கியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 6 மாதம் சிறையில் அடைக்கப்பட்ட சாய்கிரண் சமீபத்தில் விடுதலையாகி வந்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த சாய் கிரண், சுவர்ணாவுக்கு போன் செய்து அவரை கொலை செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சுவர்ணா அளித்த புகாரின் பேரில், அவரது வீட்டின் அருகே போலீசார் காத்திருந்துள்ளனர். அப்போது கத்தியுடன் சுவர்ணாவை கொலை செய்ய வந்த சாய்கிரணை சுற்றிவளைத்து பிடித்து போலீசார் கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்