இந்தியா

கோயில் பிரசாதம் உயிரிழப்பு 14-ஆக உயர்வு

கர்நாடகா மாநிலம் பெலகாவியில் கோவில் பிரசாதத்தை உட்கொண்ட 14 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

தந்தி டிவி
கர்நாடகா மாநிலம் பெலகாவி அருகே உள்ள கி​ச்சூகட்டி மாரியம்மன் கோவிலில், கடந்த வெள்ளிக்கிழமை கோபுரம் கட்டுவதற்காக பூ​மிபூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு அளிக்கப்பட்ட பிரசாதத்தை உட்கொண்ட 14 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 125 பேர் ஆபத்தான நிலையில் பெலகாவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், ஓரிரு நாளில் உண்மை தெரியவரும் என நம்பிக்கை தெரிவித்தார். மனிதர்கள் உயிருக்கு ஆபத்தான பொருட்கள் பிரசாதத்தில் கலந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதில் தொடர்புள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக எதிர்க்கட்சித் தலைவரான எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்