நிமோனியா காய்ச்சல் பாதிப்பினால், கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஷ்வினி குமார் சவுபே மக்களவையில் தெரிவித்தார். மக்களவை கேள்வி நேரத்தில் பதிலளித்த அவர், நிமோனியா காய்ச்சலினால், உயிரிழக்கும் குழந்தைகளின் பட்டியலில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் கூறினார்.