இந்தியா

காந்தியடிகளின் 72 வது ஆண்டு நினைவு தினம் : பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மலர் தூவி அஞ்சலி

மகாத்மா காந்தியின் 72வது நினைவு தினம், நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தந்தி டிவி

மகாத்மா காந்தியின் 72வது நினைவு தினம், நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இன்று தியாகிகள் தினமும் அனுசரிக்கப்படுவதால், இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தலைமையில் ராணுவ வீரர்கள் காந்தியடிகளுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனிருந்தார். முன்னதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர், காந்திக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், "ரகுபதி ராகவ ராஜா ராம்" என்ற பஜனை பாடல் இசைக்கப்பட்டது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"