இந்தியா

இந்தியா - ஆசியான் நாடுகள் உச்சி மாநாடு : வர்த்தம், கடல்வழி, டிஜிட்டல் உறவை குறிப்பிட்டு மோடி பேச்சு

அனைத்து துறைகளிலும் இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் இடையிலான உறவை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு, 'ஆசியான்' என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பில், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆசியான் அமைப்பு மற்றும் இந்தியா இடையிலான உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த உச்சி மாநாடு காணொலி வாயிலாக நடத்தப்படுகிறது. இதற்கு பிரதமர் மோடியும், வியட்நாம் பிரதமர் நுயன் சுவான் புக்கும் கூட்டாக தலைமை தாங்குகிறார்கள். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வர்த்தம், டிஜிட்ட​ல், கடல்வழி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியான் மற்றும் இந்தியா இடையிலான உறவை மேம்படுத்த வேண்டும் என கூறினார். இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் இடையிலான உறவு பாரம்பரியமிக்கது எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்