இந்தியா

இந்தியா - ஆசியான் நாடுகள் உச்சி மாநாடு : வர்த்தம், கடல்வழி, டிஜிட்டல் உறவை குறிப்பிட்டு மோடி பேச்சு

அனைத்து துறைகளிலும் இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் இடையிலான உறவை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு, 'ஆசியான்' என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பில், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆசியான் அமைப்பு மற்றும் இந்தியா இடையிலான உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த உச்சி மாநாடு காணொலி வாயிலாக நடத்தப்படுகிறது. இதற்கு பிரதமர் மோடியும், வியட்நாம் பிரதமர் நுயன் சுவான் புக்கும் கூட்டாக தலைமை தாங்குகிறார்கள். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வர்த்தம், டிஜிட்ட​ல், கடல்வழி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியான் மற்றும் இந்தியா இடையிலான உறவை மேம்படுத்த வேண்டும் என கூறினார். இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் இடையிலான உறவு பாரம்பரியமிக்கது எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு