இந்தியா

இந்தியா - ஆசியான் நாடுகள் உச்சி மாநாடு : வர்த்தம், கடல்வழி, டிஜிட்டல் உறவை குறிப்பிட்டு மோடி பேச்சு

அனைத்து துறைகளிலும் இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் இடையிலான உறவை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு, 'ஆசியான்' என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பில், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆசியான் அமைப்பு மற்றும் இந்தியா இடையிலான உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த உச்சி மாநாடு காணொலி வாயிலாக நடத்தப்படுகிறது. இதற்கு பிரதமர் மோடியும், வியட்நாம் பிரதமர் நுயன் சுவான் புக்கும் கூட்டாக தலைமை தாங்குகிறார்கள். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வர்த்தம், டிஜிட்ட​ல், கடல்வழி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியான் மற்றும் இந்தியா இடையிலான உறவை மேம்படுத்த வேண்டும் என கூறினார். இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் இடையிலான உறவு பாரம்பரியமிக்கது எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்