பிரதமர் மோடி, மணிப்பூர் மாநிலத்திற்கு சனிக்கிழமை பயணம் மேற்கொள்கிறார்.
இந்தப் பயணத்தின்போது, மணிப்பூரில் 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். கடந்த 2023-ஆம் ஆண்டு வன்முறை ஏற்பட்ட பிறகு, பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்வது இதுவே முறையாகும். முன்னதாக, மிசோரம் செல்லும் அவர், 9 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
வரும் 14-ஆம் தேதி, அஸ்ஸாமில், 18 ஆயிரத்து 530 கோடி ரூபாய் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். வரும் 15-ஆம் தேதி மேற்கு வங்கத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, கொல்கத்தாவில் ஒருங்கிணைந்த ராணுவத் தளபதிகள் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். அதே நாளில் பீகாரில் 71 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.