இந்தியா

சொந்த தொகுதி வாரணாசியில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் : முதலாவது நீர்வழி தேசிய நெடுஞ்சாலை திட்டம் தொடக்கம்

உத்தரபிரதேசத்தில் நீர்வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

பிரதமர் மோடி, தனது சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, வாரணாசி மற்றும் சாரநாத் இடையே, 1500 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையை அவர் தொடங்கி வைத்தார்.மொத்தம் 2400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை வாரணாசியில் பிரதமர் மோடி துவக்கினார்.

மேலும், நாட்டின் முதலாவது நீர்வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தையும் மோடி ஆரம்பித்து வைத்தார். அதன் அடையாளமாக, கங்கை நதியில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதலாவது பன்னோக்கு துறைமுகத்தை பிரதமர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி