இந்தியா

பிளாஸ்மாவிற்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் செலுத்தியதால் டெங்கு நோயாளி மரணம் - உபியில் அதிர்ச்சி

தந்தி டிவி

பிளாஸ்மாவிற்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் செலுத்தப்பட்ட டெங்கு நோயாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ப்ளேட்லெட்டுகள் அதிகம் தேவைப்படும் நிலையில், பிரயக்ராஜ் உள்ள குளோபல் மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட பிரதீப் பாண்டேவுக்கு ப்ளாஸ்மாவுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் செலுத்தப்பட்டுள்ளது.

ப்ளாஸ்மாவும் சாத்துக்குடி ஜூசும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும் என்பதால் மாற்றி செலுத்தியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனால் பிரதீப் உயிரிழந்த நிலையில், சாத்துக்குடி ஜூஸ் கொடுத்த போலியான ரத்த வங்கியில் பணியாற்றியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இது குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் ப்ரஜேஷ் பதக் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்