இந்தியா

பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடி வழக்கு : விசாரணைக்கு ஆஜராக 11 அதிகாரிகளுக்கு சம்மன்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி தொடர்பாக விசாரணை செய்ய, அந்த வங்கியின் 11 அதிகாரிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

தந்தி டிவி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி தொடர்பாக விசாரணை செய்ய, அந்த வங்கியின் 11 அதிகாரிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வைர வியாபாரி நீரவ் மோடிக்கு கடன் அளித்த வகையில் 13 ஆயிரம் கோடி மோசடி நடைபெற்றது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்த நிலையில் நீரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்றார். இந்த மோசடி தொடர்பாக தவறான தகவல்கள் அளிக்கப்பட்டதால், டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சுனில் மேத்தா, செயல் இயக்குநர் சஞ்சீவ் சரண் மற்றும் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி உஷா ஆனந்த சுப்ரமணியன் உள்பட 11 பேருக்கு உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்