இந்தியா

"எதை மறைக்கிறார் பினராயி விஜயன்?" - வெடித்த பூகம்பம்

தந்தி டிவி

தங்க கடத்தல் சர்ச்சை விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் எதையோ மறைப்பதாக அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

கேரளாவில் குறிப்பிட்ட சமுதாயத்தினர்தான் அதிக அளவில் தங்கக் கடத்தலில் ஈடுபடுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாக சர்ச்சை எழுந்தது.

இதற்கு கேரள முதல்வர் மறுப்பு தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட நாளிதழும் வருத்தம் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் சொல்லாத கருத்தை வெளியிட்டிருந்தால், அந்த நாளிதழ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரளாவில் தேச விரோத செயல்கள் நடைபெறுவதாக கூறும் முதல்வர் பினராயி, அதை தன்னிடம் கூறாதது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார்.

தங்க கடத்தல் குறித்து கேள்வி எழுப்பினால் வேறு எதையோ கூறி முதல்வர் திசை திருப்புவதாக குற்றம்சாட்டிய ஆளுநர் ஆரிப் கான்,

இதுதொடர்பாக குடியரசு தலைவருக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகவும் ஆளுநர் ஆரிப் கான் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி