இந்தியா

திருப்பதியில் அலைமோதும் பக்தர்ககள்..24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத சனிக் கிழமை மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி இலவச தரிசனம் செய்ய 24 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது... சுமார் 5 கிலோ மீட்டர் நீள வரிசையில் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்தனர். பக்தர்கள் வருகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இலவச தரிசனத்திற்கான டோக்கன் விநியோகத்தை வரும் 7,8,14,15 ஆகிய தேதிகளில் தேவஸ்தான நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 87 ஆயிரத்து 81 பக்தர்கள் ஏழுமலையான வழிபட்டுள்ளனர்... சுமார் 4 கோடியே 5 லட்ச ரூபாய் உண்டியலில் காணிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்