இந்தியா

'பெகாசஸ்' செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்... போர்க்கொடி தூக்கும் எதிர்கட்சிகள்

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்திற்குள் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்திற்குள் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம், முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்த நிலையில், இன்று காலையில் அவை தொடங்குவதற்கு முன்பாக, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் பதாகைகளுடன் மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும் உளவு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்