இந்தியா

ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து தண்டவாளத்தில் போராடிய பயணிகள்..

தந்தி டிவி

சென்னை - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக ரயிலின் குளிர்சாதன பெட்டி ஏசி கோளாறு குறித்து பயணிகள் கேட்டபோது, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சரிசெய்யப்பட்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், ஜோலார்பேட்டை கடந்தும் பழுது நீக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ரயிலை நிறுத்தியதுடன், தண்டவாளத்தில் இறங்கி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், சேலம் சென்றவுடன் கோளாறு சரிசெய்யப்படும் என வாக்குறுதி அளிக்க பயணிகள் மீண்டும் ரயிலில் ஏறி பயணித்தனர். இது குறித்த செய்தி தந்தி டிவியில் வெளியான நிலையில் சேலம் சென்றவுடன் பத்துக்கு மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட கோளாறை சீர் செய்துள்ளனர்.

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்