இந்தியா

ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து தண்டவாளத்தில் போராடிய பயணிகள்..

தந்தி டிவி

சென்னை - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக ரயிலின் குளிர்சாதன பெட்டி ஏசி கோளாறு குறித்து பயணிகள் கேட்டபோது, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சரிசெய்யப்பட்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், ஜோலார்பேட்டை கடந்தும் பழுது நீக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ரயிலை நிறுத்தியதுடன், தண்டவாளத்தில் இறங்கி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், சேலம் சென்றவுடன் கோளாறு சரிசெய்யப்படும் என வாக்குறுதி அளிக்க பயணிகள் மீண்டும் ரயிலில் ஏறி பயணித்தனர். இது குறித்த செய்தி தந்தி டிவியில் வெளியான நிலையில் சேலம் சென்றவுடன் பத்துக்கு மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட கோளாறை சீர் செய்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்