இந்தியா

ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து தண்டவாளத்தில் போராடிய பயணிகள்..

தந்தி டிவி

சென்னை - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக ரயிலின் குளிர்சாதன பெட்டி ஏசி கோளாறு குறித்து பயணிகள் கேட்டபோது, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சரிசெய்யப்பட்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், ஜோலார்பேட்டை கடந்தும் பழுது நீக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ரயிலை நிறுத்தியதுடன், தண்டவாளத்தில் இறங்கி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், சேலம் சென்றவுடன் கோளாறு சரிசெய்யப்படும் என வாக்குறுதி அளிக்க பயணிகள் மீண்டும் ரயிலில் ஏறி பயணித்தனர். இது குறித்த செய்தி தந்தி டிவியில் வெளியான நிலையில் சேலம் சென்றவுடன் பத்துக்கு மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட கோளாறை சீர் செய்துள்ளனர்.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM