இந்தியா

வரும் 14ம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் - பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் முடிவு

இந்தியா-சீனா எல்லை பிரச்சினை, வேலையிழப்பு, வேலையின்மை, கொரோனா பாதிப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டம், அதன் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. காணொலி மூலமாக நடந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஏ.கே.அந்தோணி, அகமது பட்டேல் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், குலாம் நபி ஆசாத், ஜெய்ராம் ரமேஷ், அதிரஞ்சன் சவுத்ரி, மாணிக்கம் தாக்கூர் மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் காங்கிரஸ் சார்பில் எழுப்ப வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியா-சீனா எல்லை பிரச்சினை, வேலையிழப்பு, வேலையின்மை, கொரோனா பாதிப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ