இந்தியா

நாடாளுமன்ற தாக்குதல்.. லக்னோவிலிருந்து இறக்கிய மர்ம பொருள்.. வெளியான பகீர் தகவல்

தந்தி டிவி

மக்களவையில் வண்ணப்புகை குண்டுகளை வீசியது தொடர்பாக சாகர் ஷர்மா, மனோரஞ்சன் ஆகிய இருவரை டெல்லி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரின் காலணிகள் மற்றும் சாக்ஸுகள் விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஷூக்களை மறைத்து வைத்ததாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், ஷூக்கள் மற்றும் சாக்ஸுகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் பயன்படுத்திய காலணிகளில், ஒரு பொருளை மறைத்து வைக்கும் அளவுக்கு இடம் உள்ளதாகவும், அதில் ஒட்டிக்கொள்வதற்காக திரவியம் வைக்கப்பட்டது கண்டறியப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சாகர் ஷர்மா லக்னோவில் ஆர்டர் செய்த காலணிகளுடன் காக்கி நிற சாக்ஸ் அணிந்திருந்தார். ஷர்மா குப்பிகளை பதுக்கி வைக்கும் காலணிகளை லக்னோவில் ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், ஷர்மாவை போலீசார் லக்னோ அழைத்துச் சென்று, எந்த கடையில் இதனை ஆர்டர் செய்தார்? என்பது குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்