பயங்கரவாதத்தின் மூலம் இந்தியா மீது பாகிஸ்தான் மறைமுக யுத்தம் நடத்திவருவதாகவும் அதனால் அதில் கூட பாகிஸ்தானால் வெல்ல முடியாது எனவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் நடந்த ராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடியின் ராஜதந்திரம் என்றார். முன்னதாக, பாதுகாப்புத்தறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.