இந்தியா

"பாக். ராணுவம், ஐஎஸ்ஐ பயிற்சி அளித்தது" - பாகிஸ்தான் தீவிரவாதி வாக்குமூலம்

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதியைக் கைது செய்த இந்திய ராணுவம், தீவிரவாதி அளித்த வாக்குமூலத்தை வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி
வடக்கு காஷ்மீரின் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய உரி பகுதியில் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அலி பாபர் பாத்ரா என்கிற தீவிரவாதியை இந்திய ராணுவம் நேற்று கைது செய்தது. இவருடன் சேர்ந்து 6 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவ முயன்ற நிலையில் அவர்களை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. இந்நிலையில் அலி பாபர் அளித்துள்ள வாக்குமூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், தன்னுடைய வறுமையை பயன்படுத்தி பாகிஸ்தானின் ISI தன்னை மூளைச்சலவை செய்து லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தில் சேர வற்புறுத்தியதாக அலி பாபர் பாத்ரா தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ் ஐ யும் சேர்ந்து தமக்கு பயிற்சி அளித்ததாக குறிப்பிட்டுள்ள அவர், கார்ஹி ஹபிபுல்லா என்ற இடத்தில் 3 வாரங்கள் பயிற்சி அளித்து ஆயுதம் வழங்கியதாகவும், 6 தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவ அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு