இந்தியா

பாகிஸ்தான் - இந்தியா தாக்குதல் விவகாரம் : எதிர்க்கட்சிகள், மத்திய அரசு பரஸ்பர குற்றச்சாட்டு

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலை ஒட்டுமொத்த நாடும் ஓரே குரலில் ஆதரித்த போது, எதிர்க்கட்சிகள் மட்டும் இதனை மத்திய அரசு அரசியலாக்குவதாக குற்றம்சாட்டுவது ஏன் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி

எதிர்க்கட்சிகளின் தவறான இந்த பேச்சை பாகிஸ்தான் தனது தரப்பு வாதத்தை வலுப்படுத்த பயன்படுத்தி கொள்வதாகவும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, பாதுகாப்பு படையினருக்கும், அரசுக்கும் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு ஆதரவளித்ததாகவும், ஆனால், அமித்ஷா உள்ளிட்ட பாஜகவினர், வீரர்களின் தியாகத்தை வைத்து ஆதாயம் தேட முயற்சித்ததுடன், காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியதாக, தெரிவித்துள்ளார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?