இந்தியா

ஆக்ஸிஜன் தயாரிப்பு- வேதாந்தா நிறுவனம் மனு

ஆக்ஸிஜன் தயாரிப்பு- வேதாந்தா நிறுவனம் மனு

தந்தி டிவி

ஆக்ஸிஜன் தயாரிப்பு- வேதாந்தா நிறுவனம் மனு

ஆக்ஸிஜனை இலவசமாக தயாரித்து வழங்க ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி கூடத்தை இயக்க அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 50 மெட்ரிக் டன் அளவில் ஆக்சிஜனை தயாரிக்கும் திறன் கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி கூடம் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தேவையை ஈடுசெய்ய இந்த கூடத்தில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜனை தயாரிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் ஆக்ஸிஜன் உற்பத்தி கூடமும் இயக்க முடியாமல் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு இலவசமாக ஆக்ஸிஜன் வாயுக்கலன்களை அளிக்க ஆக்ஸிஜன் உற்பத்தி கூடத்தை இயக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்க வேண்டும் எனவும் இடைக்கால மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ