இந்தியா

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

தந்தி டிவி

கேரள மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நவம்பர் 24-ந்தேதி வரை சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தநிலையில், இடுக்கி, பத்தினம் திட்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை திருவனந்துரம் மாவட்டத்திலுள்ள மலையோர பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் திருவனந்தபுரம் - செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குருபுழா முதல் இலவட்டம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. பல வீடுகள் மற்றும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்