இந்தியா

விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீரை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து விட்டார்.

தந்தி டிவி

கேரள மாநிலம் குமுளியில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல்போக விவசாய சாகுபடிக்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீரும், குடிநீருக்காக 100 கன அடி தண்ணீரும் இன்று திறந்து விடப்பட்டது. துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தண்ணீரை திறந்து விட்டார்.

120 நாட்களுக்கு விவசாயம் மற்றும் குடிநீருக்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்று பொதுப் பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்,

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார். பேபி அணையை பலப்படுத்துவது குறித்து உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்படி தமிழக அரசு செயல்படும் என்றும்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி