இந்தியா

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு - போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பு

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு - போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பு

தந்தி டிவி

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு - போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக, பெங்களூருவில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.கர்நாடகாவில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, அதை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையுடன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பின்னர் தடையை மீறி, சட்ட மன்ற வளாகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே,தள்ளுமுள்ளு ஏற்பட்டு வன்முறை வெடித்தது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசார் போராட்டக்காரர்கள் மீது அதிரடியாக தடியடி நடத்தியதுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்