இந்தியா

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு - போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பு

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு - போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பு

தந்தி டிவி

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு - போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக, பெங்களூருவில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.கர்நாடகாவில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, அதை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையுடன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பின்னர் தடையை மீறி, சட்ட மன்ற வளாகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே,தள்ளுமுள்ளு ஏற்பட்டு வன்முறை வெடித்தது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசார் போராட்டக்காரர்கள் மீது அதிரடியாக தடியடி நடத்தியதுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்