இந்தியா

ஓணம் கொண்டாட்டம் - கேரளாவில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை

தந்தி டிவி

கேரளாவில், ஓணம் பண்டிகை களைகட்டிய நிலையில், அங்கு எண்ணுற்று இருபத்து ஆறு கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் எழுநூற்று எழுபத்து ஆறு கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆன நிலையில், இந்தாண்டு ஓணம் பண்டிகைக்கு எண்ணுற்று இருபத்து ஆறு கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக 50 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.

இதேபோல, ஓணத்திற்கு முதல் நாளான உத்திராட நாளில் கடந்த ஆண்டில், நூற்று 26 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்ற நிலையில், இந்தாண்டில் நூற்று 37 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட கூடுதலாக 11 கோடி ரூபாய் மதுவிற்பனை ஆகும். குறிப்பாக, மாநிலத்திலேயே கொல்லம் மாவட்டம் கருணாகப்பள்ளி பகுதியில் உள்ள அரசின் சில்லறை மதுவிற்பனை கடையில் மட்டும், ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை