இந்தியா

விஷம் குடித்து கிணற்றில் விழுந்த மூதாட்டி - உயிர் பிழைத்த அதிசயம்

திருப்பூர் அருகே தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்துவிட்டு கிணற்றில் விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம், வெங்கிட்டாப்புரம் பகுதியில், மூதாட்டி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த வீரர்கள், 60 அடி ஆழ கிணற்றில், தண்ணீரில் உயிருக்கு போராடிய மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சேடபாளையத்தை சேர்ந்த பழனியம்மாள் என்ற அந்த மூதாட்டி, குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்