இந்தியா

"தேர்தலில் வெற்றி பெறும் வரை பேசமாட்டேன்" : 14 வருடமாக மௌன விரதம் இருக்கும் முதியவர்

தேர்தலில் வெற்றி பெறும் வரை, சுயேட்சை வேட்பாளர் ஒருவர், கடந்த 14 ஆண்டுகளாக யாருடனும் பேசாமல் இருந்து வருகிறார்.

தந்தி டிவி
பெங்களூர் தெற்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஆம்ப்ரோஸ் டி மெல்லோ என்பவரின் முடிவு அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. 62 வயதான இவர், களம் காணும் மூன்றாவது தேர்தல் இது. இவர் ஏற்கனவே 2014 பாராளுமன்றத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியிலும், 2018 கர்நாடக சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டவர். தேர்தலில் வெற்றி பெறும் வரை யாருடனும் பேசமாட்டேன் என்பதே இவரின் நிலைப்பாடு. எல்லா கேள்விகளுக்குமான பதிலை எழுத்தின் மூலம் வெளிப்படுத்தும் இவர் கடந்த 14 ஆண்டுகளாக மௌன விரதம் கடைபிடித்து வருகிறார். துண்டு பிரசாரம் மூலம் தனது பிரசாரத்தை மேற்கொண்டு வரும் ஆம்ப்ரோஸ் டி மெல்லோ, தனது நிலையை மக்கள் புரிந்து கொண்டு வாக்களிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்