இந்தியா

நாட்டையே உலுக்கிய ஒடிசா கோர ரயில் விபத்து.. நீதிபதி கேள்வி. மத்திய அரசுக்கு கெடு

தந்தி டிவி

தானியங்கி ரயில் பாதுகாப்பு முறையான கவச் திட்டத்தை அமல்படுத்த தேவையான வழிகாட்டுதல்களை வழங்க கோரிய மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர் பலியாயினர், ஆயிரத்து 175 பேர் காயம் அடைந்தனர். இந்த ரயில் விபத்து தொடர்பாக வழக்குரைஞர் விஷால் திவாரி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள், தானியங்கி ரயில் பாதுகாப்பு முறையான கவச் திட்டத்தை அமல்படுத்த தேவையான நிதிச் சுமை குறித்து ஆய்வு செய்தீர்களா என கேள்வி எழுப்பினர்.

மேலும், பொதுநல மனுவை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் அளிக்குமாறும், இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்ககுமாறும் உத்தரவிட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்