இந்தியா

நாட்டையே உலுக்கிய ஒடிசா கோர ரயில் விபத்து.. நீதிபதி கேள்வி. மத்திய அரசுக்கு கெடு

தந்தி டிவி

தானியங்கி ரயில் பாதுகாப்பு முறையான கவச் திட்டத்தை அமல்படுத்த தேவையான வழிகாட்டுதல்களை வழங்க கோரிய மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர் பலியாயினர், ஆயிரத்து 175 பேர் காயம் அடைந்தனர். இந்த ரயில் விபத்து தொடர்பாக வழக்குரைஞர் விஷால் திவாரி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள், தானியங்கி ரயில் பாதுகாப்பு முறையான கவச் திட்டத்தை அமல்படுத்த தேவையான நிதிச் சுமை குறித்து ஆய்வு செய்தீர்களா என கேள்வி எழுப்பினர்.

மேலும், பொதுநல மனுவை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் அளிக்குமாறும், இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்ககுமாறும் உத்தரவிட்டனர்.

Breaking | Airport | பறந்து வந்த 4 பேர்.. மும்பை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி.. அதிரவைக்கும் பின்னணி

Summer Alert | அதிகரிக்கும் வெப்பம்.. எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை

VIjay | TVK | NDA | விஜய்யுடன் இணைந்து விடுவாரோ.. சமாதானம் செய்ய பறந்து வந்த டெல்லி VIP

Vilathikulam Case Arrest | விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதான கொடூரன்..

NDA | EPS | ADMK | BJP | திடீரென்று பறந்த EPS.. முக்கிய சந்திப்பு