இந்தியா

குண்டு வெடித்து வேட்பாளர் படுகாயம்

ஒடிசாவில் இரண்டு இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தந்தி டிவி
ஒடிசாவில் இரண்டு இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் காயமடைந்த பிஜூ ஜனதா தள வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புவனேஸ்வர் மத்திய தொகுதியில் பிஜூ ஜனதா தள வேட்பாளராக, புவனேஸ்வர் நகர முன்னாள் மேயர் ஆனந்த் நாராயண் போட்டியிடுகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரசார கூட்டத்தில் அவரது வாகனத்தில் குண்டு வீசப்பட்டது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே தொகுதியில் பாஜக வேட்பாளராக ஜெகன்நாத் பிரதான் போட்டியிடுகிறார். கட்சி அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த அவரது வாகனத்திலும் குண்டு வெடித்துள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என பாஜக, பிஜூ ஜனதா தளம் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை