ஒடிசா சட்டப்பேரவையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஒடிசாவில், பஞ்சாயத்துராஜ் தினத்தை, மார்ச் 5ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 24ஆம் தேதிக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதைக் கண்டித்து, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட பிஜு ஜனதா தளம் கட்சியினர், காங்கிரஸ் கட்சியினர், முழக்கங்களையும் எழுப்பினர்.