இந்தியா

"மேற்கு வங்கத்தில் ஓபிசி மக்களுக்கு ஏமாற்றம்" - பிரதமர் மோடி ஆவேசம்

தந்தி டிவி

வாக்கு ஜிகாத் அரசியலுக்காக மேற்கு வங்கத்தில் ஓபிசி மக்களை திரினாமூல் காங்கிரஸ் ஏமாற்றியுள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கனாசில் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், முஸ்லீம்களை சமரசம் செய்வதற்காக, ஓபிசி மக்களின் உரிமைகளை திரினாமூல் காங்கிரஸ் பறித்துள்ளதாக தெரிவித்தார். ஓபிசி மக்களுக்கு எதிராக திரினாமூல் காங்கிரஸ் இருப்பதை நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளதாக கூறினார். ஓபிசி மக்களுக்கு அம்பேத்கர் கொடுத்த உரிமைகளில் திரினாமூல் காங்கிரஸ் விளையாடுவதாகவும், அதை, இரவு பகலும் அரசியலமைப்பு சட்டம் பற்றி பேசும் அனைவரும் வந்து பார்க்குமாறும் தெரிவித்தார். வங்காளத்தை முதலில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கொள்ளையடித்த‌தாக தெரிவித்த பிரதமர் மோடி, இப்போது, திரினாமூல் காங்கிரஸ் இரு கரங்களால் கொள்ளையடித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு