இந்தியா

"மேற்கு வங்கத்தில் ஓபிசி மக்களுக்கு ஏமாற்றம்" - பிரதமர் மோடி ஆவேசம்

தந்தி டிவி

வாக்கு ஜிகாத் அரசியலுக்காக மேற்கு வங்கத்தில் ஓபிசி மக்களை திரினாமூல் காங்கிரஸ் ஏமாற்றியுள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கனாசில் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், முஸ்லீம்களை சமரசம் செய்வதற்காக, ஓபிசி மக்களின் உரிமைகளை திரினாமூல் காங்கிரஸ் பறித்துள்ளதாக தெரிவித்தார். ஓபிசி மக்களுக்கு எதிராக திரினாமூல் காங்கிரஸ் இருப்பதை நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளதாக கூறினார். ஓபிசி மக்களுக்கு அம்பேத்கர் கொடுத்த உரிமைகளில் திரினாமூல் காங்கிரஸ் விளையாடுவதாகவும், அதை, இரவு பகலும் அரசியலமைப்பு சட்டம் பற்றி பேசும் அனைவரும் வந்து பார்க்குமாறும் தெரிவித்தார். வங்காளத்தை முதலில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கொள்ளையடித்த‌தாக தெரிவித்த பிரதமர் மோடி, இப்போது, திரினாமூல் காங்கிரஸ் இரு கரங்களால் கொள்ளையடித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை