இந்தியா

"மேற்கு வங்கத்தில் ஓபிசி மக்களுக்கு ஏமாற்றம்" - பிரதமர் மோடி ஆவேசம்

தந்தி டிவி

வாக்கு ஜிகாத் அரசியலுக்காக மேற்கு வங்கத்தில் ஓபிசி மக்களை திரினாமூல் காங்கிரஸ் ஏமாற்றியுள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கனாசில் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், முஸ்லீம்களை சமரசம் செய்வதற்காக, ஓபிசி மக்களின் உரிமைகளை திரினாமூல் காங்கிரஸ் பறித்துள்ளதாக தெரிவித்தார். ஓபிசி மக்களுக்கு எதிராக திரினாமூல் காங்கிரஸ் இருப்பதை நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளதாக கூறினார். ஓபிசி மக்களுக்கு அம்பேத்கர் கொடுத்த உரிமைகளில் திரினாமூல் காங்கிரஸ் விளையாடுவதாகவும், அதை, இரவு பகலும் அரசியலமைப்பு சட்டம் பற்றி பேசும் அனைவரும் வந்து பார்க்குமாறும் தெரிவித்தார். வங்காளத்தை முதலில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கொள்ளையடித்த‌தாக தெரிவித்த பிரதமர் மோடி, இப்போது, திரினாமூல் காங்கிரஸ் இரு கரங்களால் கொள்ளையடித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே