இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நீக்க கோரி நோட்டீஸ்
#electioncommission #gyaneshkumar
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நோட்டீஸ்
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்கக் கோரி, 73 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவைச் பொது செயலாளரிடம் புதிய தீர்மான நோட்டீஸை சமர்ப்பித்துள்ளனர்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது ஒன்பது குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளன.
அரசியலமைப்புச் சட்டத்தின் 324 (5) மற்றும் 124 (4) ஆகிய பிரிவுகளின் கீழ், உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்கும் நடைமுறையைப் பின்பற்றி இவரை நீக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயராம் ரமேஷ், 'தேர்தல் ஆணையர் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் விருப்பப்படி செயல்படுகிறார் என்றும்
அவர் பதவியில் நீடிப்பது அரசியலமைப்பிற்கு இழைக்கப்படும் அவமானம்' எனவும் சாடியுள்ளார்.