இந்தியா

நீரவ் மோடி உட்பட 3 பேருக்கு எதிராக...ரெட் கார்னர் நோட்டீஸ் - சர்வதேச போலீஸ் பிறப்பித்தது

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று, மோசடி செய்த வழக்கில், வெளிநாட்டில் பதுங்கியுள்ள நீரவ் மோடி உட்பட 3 பேருக்கு, சர்வதேச போலீஸ் ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது

தந்தி டிவி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று, மோசடி செய்த வழக்கில், வெளிநாட்டில் பதுங்கியுள்ள நீரவ் மோடி உட்பட 3 பேருக்கு, சர்வதேச போலீஸ் ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, வங்கிகளில் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக, சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில், வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற அவரைப் பிடிக்க சி.பி.ஐ முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில், அவரை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை இந்தியா நாடியது. இதையடுத்து, அவருக்கு ரெட்கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், நீரவ் மோடியின் சகோதரர் நிஷால் மோடி,

சுபாஷ் பராப் ஆகியோருக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்