இந்தியா

"மகள்களை கட்டாயம் ஆஜர்படுத்த வேண்டும்" - ஜனார்த்தன சர்மாவுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜனார்த்தன சர்மாவின் மகள்களை வரும் 20-ஆம் தேதி, கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், அகமதாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
ஜனார்த்தன சர்மாவின் மகள்களை வரும் 20-ஆம் தேதி, கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், அகமதாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நித்யானந்தா ஆசிரமத்தில் சட்ட விரோதமாக தனது குழந்தைகளை அடைத்து வைத்திருப்பதாக ஜனார்த்தன சர்மா தொடர்ந்த வழக்கு, அகமதாபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், ஜனார்த்தனன் சர்மாவின் இருமகள்களை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், எனவே வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக தாங்கள் ஆஜராகிறோம் என ஜனார்த்தன சர்மா மகள்கள் தரப்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்றைய விசாரணையின்போது, இதை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம், வரும் 20-ம் தேதி அவர்கள் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. 19 வயது நிரம்பிய அவர்கள் எப்போது இந்தியாவை விட்டு வெளியேறினார்கள், அவர்கள் யாருடன் பயணித்தார்கள் என்ற ஆவணங்களையும் சமர்ப்பிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி