இந்தியா

"4 பேரும் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்" - திகார் சிறை இயக்குநர் சந்தீப் கோயல் தகவல்

திகார் சிறையில் ஒரே நேரத்தில் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது இதுவே முதல் முறை.

தந்தி டிவி

திகார் சிறையில் ஒரே நேரத்தில் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது இதுவே முதல் முறை. முகேஷ் குமார், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் ஆகிய 4 பேரும் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்ததாக திகார் சிறை இயக்குநர் சந்தீப் கோயல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, திகார் சிறை வளாகத்துக்குள் சென்ற ஹரி நகர் காவல் ஆய்வாளர் 4 பேரின் சடலங்களை தீனதயாள் உபாத்தியாயா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின்னர் குற்றவாளிகளின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படும் என சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதைத் தொடர்ந்து, நிர்பயா குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றி விட்டோம் என்ற அறிக்கையை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், திகார் சிறை நிர்வாகம் இன்று தாக்கல் செய்கிறது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு