இந்தியா

"4 பேரும் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்" - திகார் சிறை இயக்குநர் சந்தீப் கோயல் தகவல்

திகார் சிறையில் ஒரே நேரத்தில் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது இதுவே முதல் முறை.

தந்தி டிவி

திகார் சிறையில் ஒரே நேரத்தில் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது இதுவே முதல் முறை. முகேஷ் குமார், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் ஆகிய 4 பேரும் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்ததாக திகார் சிறை இயக்குநர் சந்தீப் கோயல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, திகார் சிறை வளாகத்துக்குள் சென்ற ஹரி நகர் காவல் ஆய்வாளர் 4 பேரின் சடலங்களை தீனதயாள் உபாத்தியாயா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின்னர் குற்றவாளிகளின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படும் என சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதைத் தொடர்ந்து, நிர்பயா குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றி விட்டோம் என்ற அறிக்கையை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், திகார் சிறை நிர்வாகம் இன்று தாக்கல் செய்கிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை