இந்தியா

"நிர்பயா குற்றவாளிகள் மனு தள்ளுபடி" - டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு

திகார் சிறை அதிகாரிகளுக்கு எதிராக நிர்பயா குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தந்தி டிவி

நிர்பயா வழக்கு குற்றவாளிகள், வினய்குமார், முகேஷ் சிங், அக்‌ஷய் குமார், பவன் சிங் ஆகியோருக்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில், திகார் சிறை அதிகாரிகளுக்கு எதிராக, நிர்பயா குற்றவாளிகள் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சீராய்வு, கருணை மனுக்கள் தாக்கல் செய்வதற்கான ஆவணங்களை திகார் சிறை அதிகாரிகள் வழங்கவில்லை என குற்றவாளிகள் தரப்பில் முறையிடப்பட்டது. இதை மறுத்த டெல்லி காவல்துறை தரப்பு, தண்டனையை தாமதப்படுத்த முயற்சி நடப்பதாக வாதம் செய்தது. வாதங்களை கேட்டறிந்த டெல்லி நீதிமன்றம், நிர்பயா குற்றவாளிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்