இந்தியா

தாம்பரம் - நெல்லை இடையே முன்பதிவில்லாத புதிய ரெயில் சேவை துவக்கம்

சென்னை - மாநகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, சென்ட்ரல் , எழும்பூர் முனையங்களை தொடர்ந்து, 3 - வது ரெயில் முனையமாக தாம்பரம் உதயமாகி உள்ளது

தந்தி டிவி

சென்னையில் உதயமானது, 3-வது ரெயில் முனையம் : தாம்பரம் - நெல்லை இடையே முன்பதிவில்லாத புதிய ரெயில் சேவை துவக்கம்

சென்னை - மாநகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, சென்ட்ரல் , எழும்பூர் முனையங்களை தொடர்ந்து, 3 - வது ரெயில் முனையமாக தாம்பரம் உதயமாகி உள்ளது. இந்த புதிய ரெயில் முனையத்தை மத்திய ரெயில்வே

அமைச்சர் ராஜென் கோஹைய் துவக்கி வைத்தார். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தாம்பரம் - நெல்லை இடையே அந்யோதயா என்ற முன்பதிவில்லாத புதிய ரெயில் சேவையை, மத்திய அமைச்சர் ராஜென் கோஹைன், கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த புதிய ரெயில், தாம்பரத்தில் இருந்து தினமும் இரவு 12.30 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம் - மயிலாடுதுறை - தஞ்சை - திருச்சி - திண்டுக்கல் - மதுரை - விருதுநகர் வழியாக பிற்பகல் 3.30 மணிக்கு, நெல்லை சென்று சேரும். மறு மார்க்கத்தில், இந்த ரெயில், நெல்லையில், மாலை 5.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்