இந்தியா

தாம்பரம் - நெல்லை இடையே முன்பதிவில்லாத புதிய ரெயில் சேவை துவக்கம்

சென்னை - மாநகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, சென்ட்ரல் , எழும்பூர் முனையங்களை தொடர்ந்து, 3 - வது ரெயில் முனையமாக தாம்பரம் உதயமாகி உள்ளது

தந்தி டிவி

சென்னையில் உதயமானது, 3-வது ரெயில் முனையம் : தாம்பரம் - நெல்லை இடையே முன்பதிவில்லாத புதிய ரெயில் சேவை துவக்கம்

சென்னை - மாநகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, சென்ட்ரல் , எழும்பூர் முனையங்களை தொடர்ந்து, 3 - வது ரெயில் முனையமாக தாம்பரம் உதயமாகி உள்ளது. இந்த புதிய ரெயில் முனையத்தை மத்திய ரெயில்வே

அமைச்சர் ராஜென் கோஹைய் துவக்கி வைத்தார். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தாம்பரம் - நெல்லை இடையே அந்யோதயா என்ற முன்பதிவில்லாத புதிய ரெயில் சேவையை, மத்திய அமைச்சர் ராஜென் கோஹைன், கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த புதிய ரெயில், தாம்பரத்தில் இருந்து தினமும் இரவு 12.30 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம் - மயிலாடுதுறை - தஞ்சை - திருச்சி - திண்டுக்கல் - மதுரை - விருதுநகர் வழியாக பிற்பகல் 3.30 மணிக்கு, நெல்லை சென்று சேரும். மறு மார்க்கத்தில், இந்த ரெயில், நெல்லையில், மாலை 5.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை