இந்தியா

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் பென்ஷன் : புதிய திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, இன்று துவக்கி வைக்கிறார்.

தந்தி டிவி

60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, இன்று துவக்கி வைக்கிறார். இதற்கான விழா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் இந்த திட்டத்தில் இணையலாம் என அறிவித்துள்ள மத்திய அரசு, மாதம் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை பிரிமீயம் தொகை கட்ட வேண்டும் என கூறியுள்ளது. அதாவது, வயதுக்கு ஏற்ப, இந்த பிரமீயம் தொகை மாறுபடும். விவசாயின் மனைவியும் இந்த திட்டத்தில் சேரலாம் என்றும், விவசாயி மரணம் அடைந்தால், அவரது மனைவிக்கு, பென்ஷன் கிடைக்கும் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்காக அடுத்த 3 ஆண்டுகளில், 10 ஆயிரத்து 770 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை