இந்தியா

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் பென்ஷன் : புதிய திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, இன்று துவக்கி வைக்கிறார்.

தந்தி டிவி

60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, இன்று துவக்கி வைக்கிறார். இதற்கான விழா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் இந்த திட்டத்தில் இணையலாம் என அறிவித்துள்ள மத்திய அரசு, மாதம் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை பிரிமீயம் தொகை கட்ட வேண்டும் என கூறியுள்ளது. அதாவது, வயதுக்கு ஏற்ப, இந்த பிரமீயம் தொகை மாறுபடும். விவசாயின் மனைவியும் இந்த திட்டத்தில் சேரலாம் என்றும், விவசாயி மரணம் அடைந்தால், அவரது மனைவிக்கு, பென்ஷன் கிடைக்கும் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்காக அடுத்த 3 ஆண்டுகளில், 10 ஆயிரத்து 770 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்