இந்தியா

புதிய பென்ஷன் திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

விவசாயிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்தார்.

தந்தி டிவி
விவசாயிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்கும் புதிய திட்டத்தை, பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்தார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி பங்கேற்றார். விழா மேடையில், ஓய்வூதிய பயனாளிகளுக்கு , திட்டத்தில் சேர்ந்ததற்கான அடையாள அட்டையை பிரதமர் மோடி வழங்கினார். 2 ஹெக்டேர் வரை, விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், இந்த திட்டத்தில் பயனடைவார்கள். 18 முதல் 40 வயது உடைய விவசாயிகள், இத்திட்டத்தில் சேர்ந்து மாதம் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலுத்த வேண்டும். 60 வயதுக்கு பிறகு விவசாயிகளுக்கு குறைந்த பட்சம் மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்