இந்தியா

புதிய இந்திய தண்டனைச் சட்டம்..! ப.சிதம்பரம் X தளத்தில் பரபரப்பு ட்விட் | IPC | CRPC

தந்தி டிவி

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், புதிய இந்திய தண்டனைச் சட்டம் மிகவும் அபாயகரமானது என்றும், ஏழை, உழைக்கும் வர்க்கம் ஒடுக்கும் கருவியாக மாறும் என்றும் எச்சரித்துள்ளார். புதிய குற்ற விசாரணை முறை சட்டத்தில், அரசியலமைப்பின் 19 மற்றும் 21-வது பிரிவுகளை மீறும் வகையில் பல விதிகள் உள்ளதால், அதன் பாதிப்பை ஏழை மக்கள் சுமக்க நேரிடும் என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். 'சுதந்திரம்' மற்றும் 'தனிப்பட்ட சுதந்திரம்' ஆகியவற்றைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் பல விதிகள் உள்ளதாகவும் கூறியுள்ளார். கைது மற்றும் போலீஸ் காவலில் இச்சட்டம் காவல்துறையின் அத்துமீறலுக்கும், துன்ப சம்பவங்களுக்கும் வழிவகுத்துவிடும் என்றும் எச்சரித்துள்ளார். 2024-ம் ஆண்டில் அமையும் புதிய அரசு, முதல் பணியாக மறு பரிசீலனை செய்து, கடுமையான விதிகளை அகற்ற வேண்டும் என்று ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை