இந்தியா

பயிற்சியில் ஈடுபட்ட கிளைடர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து - கடற்படை லெப்டினட் உள்பட 2 வீரர்கள் பலி

கேரள மாநிலம் கொச்சி அருகே கடற்படைக்கு சொந்தமான கிளைடர் வானில் ப​யிற்சியின் போது, கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானதில் இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

தந்தி டிவி

கொச்சி ஐ.என்.எஸ். கருடா விமானப் படைத் தளத்தில் இருந்து இன்று காலை 7 மணிக்கு பயிற்சிக்கு புறப்பட்ட கிளைடர் விமானம், சிறிது நேரத்திலேயே விபத்துக்கு உள்ளாகி தொப்பம்பாடி பாலம் அருகே விழுந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த 39 வயதான லெப்டினட் ராஜீவ், உத்தராக்கண்ட் மாநிலத்தையும், 29 வயதான சுனில்குமார் பீகார் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள். ராஜீவ்க்கு திருமணமாகி இரண்டு குழந்தை உள்ளதும், சுனில் குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிளைடர் விபத்து குறித்து தென் மண்டல கடற்படையும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்