இந்தியா

முன்விரோதத்தால் கடந்த ஆண்டு கொலை : குழந்தையின் கையில் பட்டா கத்தி தந்து சபதம்... இணையத்தில் வேகமாக பரவி வரும் வீடியோ

புதுச்சேரியில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட நண்பனின் கல்லறை முன்பாக அவரின் குழந்தையின் கையில் பட்டா கத்தி கொடுத்து இளைஞர்கள் கேக் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

முன்விரோதத்தால் கடந்த ஆண்டு கொலை : குழந்தையின் கையில் பட்டா கத்தி தந்து சபதம்... இணையத்தில் வேகமாக பரவி வரும் வீடியோ

புதுச்சேரியில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட நண்பனின் கல்லறை முன்பாக அவரின் குழந்தையின் கையில் பட்டா கத்தி கொடுத்து இளைஞர்கள் கேக் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி திப்புராயபேட்டையை சேர்ந்தவர் திப்லான். முன்விரோதம் காரணமாக கடந்த ஆண்டு இவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் தாவீத், கவுசிக பாலசுப்பிரமணி, தணிகையரசு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிலர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் திப்லானின் பிறந்தநாள் அன்று அவரது கல்லறையில் நண்பர்கள் கூடினர். திப்லானின் குழந்தையின் கையில் பட்டா கத்தியை கொடுத்து கேக் வெட்ட வைத்த அவர்கள், கொலை செய்தவர்களை பழி வாங்கும் வகையிலான பாடலையும் பாடி சபதம் எடுத்துக் கொண்டனர். இந்த வீடியோவானது இணையத்தில் பரவி வரும் நிலையில் ஒதியஞ்சாலை பகுதியில் ஆயுதங்களுடன் சென்ற மணி என்பவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை