Mumbai | Snake | டிக்கெட் கவுன்ட்டருக்கு வந்த பாம்பு | பரபரப்பான ரயில் நிலையம் ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டரில் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு மும்பை அருகே டோம்பிவ்லி ரயில் நிலையத்தில் உள்ள, ராம்நகர் முன்பதிவு அலுவலகத்தின் ஜன்னல் பகுதியில் பாம்பு ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயன்பாடின்றி இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலகத்தின் பின்பகுதி வழியாக பாம்பு உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தகவலறிந்து விரைந்து வந்த பயிற்சி பெற்ற பாம்பு பிடிப்பவர், பாம்பை பாதுகாப்பாக மீட்டார். நற்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.