இந்தியா

மேக‌தாது அணை ஒன்றே தீர்வு-டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

தந்தி டிவி

பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அறுபது சதவீதம் மழை குறைந்து இருப்பதன் காரணமாக அணைகளில் புதிய நீர் இல்லை என்றார். கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்காமல் 5 ஆயிரம் கன‌அடி நீர் திறக்க ஆணையம் உத்தரவிட்டது விவசாயிகளை பாதித்துள்ளதாகவும் தெரிவித்தார். விகிதாச்சார அடிப்படையை பார்க்கும் போது மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகளில் இருந்து, தமிழகம் 93 டிஎம்சி நீரை கூடுதலாக விவசாயத்திற்கு பயன்படுத்தி இருப்பதாக டி.கே.சிவக்குமார் கூறினார். அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து விவசாயிகள் பயிர்களை அறிவுறுத்தி இருக்க வேண்டும் என்ற அவர், ஆனால் அது தமிழக அணைகள் என்பதால் அவர்களின் உரிமையில் எதையும் கூற விரும்பவில்லை என்றார். மேகதாது அணை திட்டம் ஒன்றே இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என்பதை ஆணையத்தில் அழுத்தமாக பதிவு செய்ய உள்ளதாகவும் டி.கே.சிவக்குமார் கூறினார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு