இந்தியா

குதிரையின் கழுத்தை அறுத்த நபருக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னையில் முன்விரோதம் காரணமாக குதிரையின் கழுத்தை அறுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்

தந்தி டிவி

சென்னையில் முன்விரோதம் காரணமாக குதிரையின் கழுத்தை அறுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை நடுக்குப்பத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் குதிரைகளை வைத்து மாப்பிள்ளை அழைப்பு போன்ற நிகழ்வுகளை நடத்தும் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கோகுல் என்பவருடன் ஏற்பட்ட பிரச்சினையில் ராஜேஷ் அவரை சிறைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் ராஜேஷை தாக்க வந்த கோகுல், அவர் இல்லாததால் அங்கிருந்த குதிரையின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த குதிரைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி