Mamata Banerjee | "உங்களால் முடியுமா..?" - பிரதமரிடம் நேருக்கு நேர் சவால் விட்ட மம்தா
#MamataBanerjee #pmmodi #thanthitv
மேற்கு வங்கத்தின் கங்கை நதி தூய்மையாக உள்ளதால் பிரதமர் மோடி அதில் படகு பயணம் செய்தது மகிழ்ச்சிதான் என்று கூறியுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அதேசமயம் டெல்லியில் உள்ள யமுனை நதியின் நிலை குறித்து விமர்சித்துள்ளார்.
மிக மோசமாக மாசடைந்துள்ள, யமுனை நதியில் இறங்கி பிரதமரால் ஒருமுறை குளிக்க முடியுமா? என்றும் கேள்வி மம்த பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி பாஜக அரசு யமுனையைத் தூய்மைப்படுத்தாதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.