இந்தியா

ப்ளூடூத் மூலம் காப்பி - அப்படியே அதே பாணியில் முக்கிய தேர்வில் ஆள் மாறாட்டம்

தந்தி டிவி

திருவனந்தபுரத்தில், வசூல்ராஜா பட பாணியில் இஸ்ரோ தொழில்நுட்ப பணியாளர்களுக்கான தேர்வில் செல்போன் ப்ளூடூத் மூலம் காப்பியடித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் தொழில்நுட்ப பிரிவு பணியாளருக்கான தேர்வு நடைபெற்றது. இதில், காட்டன்ஹில், செயின்ட் மேரிஸ் பள்ளியில் தேர்வு எழுதிய இரண்டு பேர் செல்போன் ப்ளூடூத் மூலம் காப்பி அடித்ததை கண்காணிப்பாளர்கள் கண்டுபிடித்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் மறைத்து வைத்திருந்த செல்போன் மற்றும் ப்ளூடூத் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் சுனில் குமார், சுமித் குமார் என்ற இருவரும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இருவரும் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்ததும் தெரியவந்தது. இருவர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை